Tuesday, September 10, 2019

ஓம்கார ரூபிணீ



ஓம்கார ரூபிணீ ஆதிசிவ காமிநீ
(ஓம்)

அகலாமல் ஒரு பாகம் இருப்பவள் நீ, என்றும்
அசையாத சிவனாரை அசைப்பவள் நீ
(ஓம்)

கயிலை மலை மீதில் காந்த ரூபிணீ
மயிலாபுரி வாழும் கற்பகத் தேவிநீ
(ஓம்)

வாலையாய்... கன்னியாய்... அன்னையாய்...விளங்கும்
ஓம்கார ரூபிணீ ஆதிசிவ காமிநீ
(ஓம்)

கையில் கரும்பேந்தி இதழில் நகையேந்தும் ராஜராஜேஸ்வரி
கருணை விழியேந்தி கவலைகளைத் தீர்க்கும் ஸ்ரீதுர்கேஸ்வரி
அண்டங்கள் யாவையும் அரசாட்சி செய்யும் அகிலாண்டேஸ்வரி
அன்புடன் உயிர்களுக்(கு) உணவிடுகின்ற அன்னபூர்ணேஸ்வரி
(ஓம்)

காளியாய்...கமலையாய்...வாணியாய்...விளங்கும்
ஓம்கார ரூபிணீ ஆதிசிவ காமிநீ
(ஓம்)


--கவிநயா

No comments:

Post a Comment