Monday, September 23, 2019

அம்மா வருவாய்



நாவில் நிலைத்த உன் நாமம்
நாளும் அழைத்தேன் நானும்
கண்ணில் நிலைத்த உன் வதனம்
அதனைப் பண்ணில் விதைத்தேன் நிதமும்

உரவை நிறுத்தித் தடுத்தாய்
யமனை எட்டி உதைத்தாய்
ரதிக்கு மதனை அளித்தாய்
அருளைப் பாலாய்க் கொடுத்தாய்

நீ அறியாயததும் உண்டோ?
உன் கருணைக்கு எல்லை உண்டோ?
இருக்கையை விட்டு எழுவாய்
உடனே ஓடி வருவாய்

இன்னும் தாமதம் ஏனோ?
உனக்கிது பெருமை தானோ?
அம்மா விரைவாய் வருவாய்
உன் மடியில் ஓர் இடம் தருவாய்!


--கவிநயா



No comments:

Post a Comment