விழியின் ஒளி
விழியில் ஒளியாக இருப்பவளே, என்
கவியில் கருவாக நிலைத்தவளே
(விழியில்)
பக்திக்கும் பணிவுக்கும் பரிபவள் நீயே
முக்திக்கு வித்தான என்னுயிர்த் தாயே
(விழியில்)
தித்திக்கும் செந்தமிழில் உன்னைப் பாடும் வரம் தந்தாய்
எத்திக்கும் நிறைந்தவளே என் மனதிலும் நிறைந்தாய்
முத்துச் சிரிப்பழகால் அத்தன் மனங் கவர்ந்தாய்
வித்தகியே அவன் இடப்புறத்தில் அமைந்தாய்
(விழியில்)
--கவிநயா
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment