Monday, October 7, 2019

தாமரை மலரே!

தாமரை மலரே தாமரை மலரே
தாயினைத் தாங்கிடும் பேறு கொண்டாய்
தாயவள் பூம்பதம் தாங்கிடத்
தாமரை மலரே நீயென்ன தவம் செய்தாய்?
(தாமரை)

தாமரை திருப்பதம் தாமரை தளிர்க்கரம்
திருமுகமும் எழில் தாமரையே
தேடிடும் என்மனம் நாடிடும் அவள்பதம்
பாடிடும் தினம் அவள் திருப்புகழே
(தாமரை)

அன்னங்கள் நாணிடும் நடையழகில்
சொர்ணமும் மயங்கிடும் அவள் எழிலில்
வீணை குழைந்திடும் அவள் கரத்தில்
வேதங்கள் கிடந்திடும் திருப்பதத்தில்

கலைகளின் ராணி கலைவாணி
காந்த விழிகொண்ட எழில்வேணி
நாளும் அவள் பாதம் போற்றிடுவோம்
ஞான ஒளி நம்மில் ஏற்றிடுவாள்
(தாமரை)


--கவிநயா

No comments:

Post a Comment