Tuesday, November 12, 2019

கடைப்பார்வை



அம்மா உன் கடைப்பார்வை கிடைத்தாலே அது போதும்
அம்மா உன் நினைவாலே உயிர் வாழ்கிறேன்
சிவனோடு எழிலான சிவையாகத் திகழ்பவளே
அதற்காகத் தானே நான் தினம் ஏங்கினேன்
(அம்மா)

பல ஊரில் பல கோவில் பல நாமம் கொண்டவளே
மனக் கோவில் குடியிருக்க வருவாயம்மா
தேவாதி தேவருக்கும் அருள் செய்ய வடிவெடுத்தாய்
உன் பேதைப் பெண்ணுக்கும் அருள்வாயம்மா
(அம்மா)

கரத்தாலே விடம் நிறுத்திக் கணவனையே காத்தவளே
எனைக் காக்க என்றைக்கு வருவாயம்மா?
கணபதிக்கு உயிர் தந்தாய் கந்தனுக்கு வேல் தந்தாய்
எனக்கென்ன தருவாயோ சொல்வாயம்மா
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment