Monday, November 18, 2019

வரம்


பலமுறை முகம் பார்த்தேன்
சிலமுறை வரம் கேட்டேன்
பதிலேதும் தாராமல் தாயே
இருப்பது ஏனோ சொல்வாய் நீயே

தவறெதும் செய்தேனோ
தாயுனை வைதேனோ
தவறுகள் மறப்பாயே தாயே
தருணத்தில் காப்பாயே நீயே

உன்மடி விழ வேண்டும்
ஒருகுரல் அழ வேண்டும்
விதியின் கைப்பாவை ஆனேன் தாயே, உன்னை
கதியெனக் கொண்டேன் காப்பாய் நீயே

ஒவ்வொரு நொடியும் 
உன் நினைவே எனை ஆள
உன் திருப்பெயரெந்தன் 
நாவினில் நடமாட
ஒருவரம் தருவாயே தாயே, அதில்
தினம் திளைத்திருப்பேன் உந்தன் சேயே


--கவிநயா

No comments:

Post a Comment