Monday, February 3, 2020

அபிராமி




சுப்புத்தாத்தா வின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா! வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகேழும் பெற்றவளே அபிராமி
ஒரு தாயே உத்தமியே அருள்வாமி
(உலகேழும்)

உதிக்கின்ற செங்கதிரோன் போலச் சிவந்தவளே
மலர்க்கமலை துதிக்கும் மங்கலையே சிவையே
(உலகேழும்)

பூங்கணையும் கரும்பும் ஏந்திய ஏந்திழையே
துணை நீயே தாயே, நான் தொழும் தெய்வம் நீயே
பாசமும் அங்குசமும் கரங்களில் நீ பிடிக்க
பாசமுடன் உன்னை நான் பிடித்தேன், அருள்வாய்
(உலகேழும்)


--கவிநயா

No comments:

Post a Comment