Monday, February 24, 2020

சொத்தும் சொந்தமும்


சந்ததமும் உன்றன் புகழ் பாடுகிறேனே, என்றன்
வெந்தமனம் குளிர வைக்கும் சந்தனம் நீயே
(சந்ததமும்)

கஞ்ச மலர்ப் பாதம், அதை நெஞ்சில் வைத்தால் போதும்
விஞ்சி வளரும் வல்வினைகள் யாவும் பயந்தோடும்
(சந்ததமும்)

மத்திடையே ததியெனவே உழலும் வாழ்விதில்
சொத்தெனவே வந்த என்றன் சொந்தம் நீயன்றோ?
வித்துமாகி விளைவுமாகி நின்றவளே தாயே, பெரும்
பொக்கிஷமாய் என்னுயிரில் கலந்து நின்றாய் நீயே
(சந்ததமும்)



--கவிநயா

No comments:

Post a Comment