Monday, May 18, 2020

வந்து விடு


வந்து விடு தாயே

(அருள்) தந்து விடு நீயே

உன்னையே அழைக்கின்றேன்

உளமாரத் துதிக்கின்றேன்

(வந்து)

 

ஆயிர மாயிரமாய் எண்ணங்கள் ஓடி வரும்

ஆயினும் என் மனமோ உன்னையே தேடி வரும்

செந்தமிழ்ப் பண்ணெடுத்து உன்புகழ் பாடி வரும்

சொந்தம் நீயே என்று உன்நிழல் நாடி வரும்

(வந்து)

 

கண்மணி உன் நினைவே கருத்தினில் சுமந்திடவும்

பொன்னெழில் பூம்பாதம் தினந்தினம் பணிந்திடவும்

உன்னை எண்ணும் போதிலெல்லாம் இருவிழி வழிந்திடவும்

உனையன்றி உண்மை இல்லை என்றுள்ளம் உணர்ந்திடவும்

(வந்து)


--கவிநயா

No comments:

Post a Comment