Tuesday, August 11, 2020

அழகு முகம்

 

அழகு முகம் காண ஆவல் கொண்டேன்

பழகு தழிழ்ப் பாடல் பாடி வந்தேன்

பாற்கடல் மாதவன் சோதரியே

பரமசிவனின் ப்ரிய பார்வதியே

(அழகு)

 

சங்கரி சௌந்தரி நிரந்தரியே

சதுர்முகியே எழில் சியாமளையே

சந்ததமுன் புகழ் பாடுகின்றேன்

சிந்தையிலே வந் தெழுந்தருள்வாய்

(அழகு)

 

நாயகி நான்முகி நாரணி நீயே

நான்மறை போற்றும் நன்மணி நீயே

ஆதி அந்தம் இல்லா ஜோதியும் நீயே

அகிலத்தைக் காத்திடும் அன்புத் தாயே

(அழகு)


--கவிநயா



No comments:

Post a Comment