Monday, August 3, 2020

அருகில் வா அம்மா


அன்புத் தாயே அருகினில் வாயேன்

உன்னை எண்ணி நாளும் உருகிடும் நிலை தாயேன்

(அன்புத்)

 

வான் பொழியும் மழை வையத்தை நனைப்பது போல்

உனதருள் மழையாலே என் இதயம் நனைக்க

(அன்புத்)

 

அழகிய திருவதனம் முழுமதி யெனத் துலங்க

அஞ்சேல் அஞ்சேலென்று அபயக் கரம் விளங்க

தந்தேன் நிழலென்று தண்டை யொலி முழங்க

சென்றேன் சென்றேனென்று வல்வினைகள் மலங்க

(அன்புத்)


--கவிநயா


1 comment: