முத்து
உதிர்ந்திடுமோ, என்றன்
மோகம்
விரட்டிடுமோ
பற்று
விலகிடுமோ, உன்மேல்
பாசம்
பெருகிடுமோ
(முத்து)
வந்து
பிறந்து விட்டேன், உலகில்
வாசனை
தீரவில்லை
நொந்து
மயங்கி விட்டேன், விதியின்
ஆட்டமும்
தீரவில்லை
(முத்து)
அன்னை
எனக் கொண்டேன், என்னை
உன்றன்
பிள்ளை எனக் கொண்டேன்
அன்னையென
நீயே, இருந்தும்
என்ன
பயனைக் கண்டேன்
அலைகள்
ஓய்ந்திடுமோ, இதயம்
ஆறுதலைப்
பெறுமோ
பிறவிக்
கடல்தனை, நானும்
கடக்கும்
நாள் வருமோ
(முத்து)
--கவிநயா
No comments:
Post a Comment