மண்ணுலகும்
பொன்னுலகே
மாதரசி துணையிருந்தால்
மண்பிறப்பும்
நற்பிறப்பே
மங்கை யுன்னை நினைத்திருந்தால்
(மண்)
உன்னை
என்றன் நெஞ்சில் வைத்து
உன்றன் பாதம் பூஜித்து
உன்றன்
நாமம் ஜெபித்து
உன்னைப் பாடித் துதித்து வந்தால்
(மண்)
ஊரும்
உண்டு பேரும் உண்டு
உற்றார் பெற்றரும் உண்டு
உன்னை
என்றன் அன்னை என்று
சொந்தம் கொண்டு வந்தேன் இன்று
கோடி
ஜென்மம் கொண்ட போதும்
அன்னை மட்டும் நீயேயன்றோ
ஓடி
வந்தேன் உன்னை நாடி
பாடி வந்தேன் உன்னைத் தேடி
(மண்)
--கவிநயா
No comments:
Post a Comment