Monday, March 22, 2021

பிழை செய்தாலும் பிள்ளையன்றோ?

 

என்ன பிழை செய்தாலும்

உன்றன் பிள்ளை நானன்றோ

அன்னை என ஆன பின்னே

பொறுப்பதுன் கடனன்றோ

(என்ன)

 

ஆதி முதல் ஆனவளே

அண்ட மெல்லாம் பூத்தவளே

சோதி வடிவானவளே

சொக்கர் அருகி ருப்பவளே

(என்ன)

 

கண்டவர்கள் சொன்னார்கள்

கருணை உன் வடிவமென்று

அன்பு கொண்டு அழைத்து விட்டால்

ஓடி அருள் புரிவை யென்று

 

அன்பு இல்லா என் மனமும்

உன்றனுக்குச் சம்மதமோ

அன்பை என்று தருவாயோ

என்றென் மனம் அமர்வாயோ

(என்ன)

 

--கவிநயா



1 comment: