Monday, March 1, 2021

என் தங்கம்!

 

தங்கமே வைரமே

தத்தி வரும் அன்னமே

காணாமல் வாடுகின்றேன் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)

 

ஓடி வரும் ஆற்றைப் போல

ஓடுகின்ற இந்த வாழ்வு

உன்னை நோக்கி ஓட வேண்டும் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)

 

தாளாத துயர் கூட

தக்ஷணத்தில் ஓடி விடும்

கேளாத இன்ப மெல்லாம்

தேடி வந்து கூடி விடும்

உன்னை மட்டும் கண்டு கொண்டால் சுவர்ணமே, உன்னைக்

கண்டு விட்டால் இங்கு வரும் சுவர்க்கமே

(தங்கமே)


--கவிநயா



No comments:

Post a Comment