Tuesday, July 13, 2021

உன் நாமம்

 

மயிலறகாய் வருடுதம்மா உன்திரு நாமம், அதைச்

சொல்லச் சொல்ல நாவினிலே ஊறுது தேனும்

(மயில்)

 

ஓடுகின்ற எண்ணமெல்லாம் ஒரு நொடி நிற்கும், அது

வாடுகின்ற போதுன் உன்மேல் நம்பிக்கை வைக்கும்

(மயில்)

 

கோடிக் கோடிப் பிள்ளைகளில் கடைநிலைப் பிள்ளை, உனைக்

கூவிக் கூவி அழைக்கின்றேன், பொறுத்திடு தொல்லை

உன் புகழைப் பாடிப் பாடிப் பிழைத்திடும் கிள்ளை

உன் திருவடிக ளன்றி எனக்கு அடைக்கலம் இல்லை

(மயில்)

 

 

--கவிநயா


No comments:

Post a Comment