Tuesday, August 24, 2021

வரலக்ஷ்மி தாயே


வரலக்ஷ்மி தாயே வரமருள்வாயே

வந்தெங்கள் மனை புகுந்து, வாழ வைப்பாயே

(வரலக்ஷ்மி)

 

பாற்கடலில் பிறந்தாய்

பகலவன்போல் ஒளிர்ந்தாய்

பங்கயத்தில் அமர்ந்தாய்

பரந்தாமனை அடைந்தாய்

(வரலக்ஷ்மி)

 

எட்டு வடிவங்கள் கொண்டு

நவ நிதி அளிப்பவளே

எட்டாத செயலனைத்தும்

எட்டும்படி செய்பவளே

 

செங்கமலத்தில் உறைவாய்

செய்யப் பட்டுடன் திகழ்வாய்

எங்கள் இல்லம் வந்திடுவாய்

மங்கலங்கள் தந்திடுவாய்

(வரலக்ஷ்மி)

 

--கவிநயா

No comments:

Post a Comment