Tuesday, March 22, 2022

பரம சுகம்

பரம சுகம் உன்றன் பாதம், அதைப்

பற்றிக் கொண்டால் ஏது சோகம், சோகம்?

(பரம)

 

வருவதும் போவதும் போகட்டும் போகட்டும்

இருப்பதும் நிலைப்பதும் உன் நினைவாகட்டும்

(பரம)

 

உன் பதமே நினைத்து உன் பெயரே ஜெபித்து

உன் நினைவில் திளைத்து உன் புகழில் களித்து

தினந்தினம் உனைப்பாடி, திருவடிதனை நாடி

அடைந்திடுவேன் தேடி, அன்புடன் பண்பாடி

(பரம)

 

--கவிநயா


 

No comments:

Post a Comment