Tuesday, May 3, 2022

கல்லான என் மனதில்...


கல்லான என் மனதில் கனிவோடு அமர்ந்திடுவாய்

புல்லான என் ஜீவன் பொலியச் செய்வாய்

(கல்லான)

 

உன் நாமம் ஒன்றே நான் நாளும் பழகிடவும்

உன் பேரைக் கேட்டவுடன் உள்ளம் உருகிடவும்

(கல்லான)

 

பொன்னான பூம்பாதம் தலைமேல் வலிய வைத்து

கண்ணாலே வல் வினைகள் கழலச் செய்வாய்

நஞ்சுண்ட கண்டத்தான் இடப்பாகம் இருப்பவளே

அஞ்சல் என்றெனக் கென்று அருளிச் செய்வாய்

(கல்லான)

 

--கவிநயா

No comments:

Post a Comment