Sunday, April 17, 2022

வழி காட்டு

வழி காட்ட வருவாய்

வந்தருள் தருவாய்

இருள் நீக்கி ஒளி கூட்டி

இன்னருள் புரிவாய்

(வழி)

 

வினைப்பயன் ஊட்டி வைத்தாய்

வெந்து தண லாகின்றேன்

நினைப்பது உன்பதமே

நினையாயோ என் நிலைமை

(வழி)

 

பனித்துளி இவ்வாழ்வு

படித்தவர் சொன்னார்கள்

பாலைவனம் அது எனக்கு

புரியலையோ உனக்கு

 

உன்பதம் பசுஞ்சோலை

உனதருளே நிழலாய்

உன்புகழ் பாடுகின்றேன்

நிதம் அதுவே தொழிலாய்

(வழி)

 

--கவிநயா


 

No comments:

Post a Comment