Monday, August 17, 2009

வருவாயென...

யார் என்ன சொன்னாலும்
ஏங்கி அழ வைத்தாலும்

கண்களிலே கண்ணீர்தான்
காவியங்கள் வரைந்தாலும்

என் மனதில் ஓர் இன்பம்
ஏனோதான் விளைகிறது

சொல்லாத நம்பிக்கை
தன்னாலே முளைக்கிறது

அழுகுரல் கேட்டாலேனும்
அபயந்தர வருவாயென…

கதறல் கேட்டாலேனும்
காப்பாற்ற வருவாயென…

பயம் தெளிவித்திடவே
பதறி நீ வருவாயென…

அரவணைத்து அன்புடனே
ஆறுதல் தருவாயென…

மார்மேலே சாய்த்தெந்தன்
மாயைகள் களைவாயென…

மடிமேலே சாய்த்தெந்தன்
மனக்கவலை துடைப்பாயென…


--கவிநயா

2 comments:

  1. // Earn Staying Home said...
    அருமை//

    முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete