Monday, August 31, 2009

ஸ்ரீ ஜகன் மோகினி கல்யாணி !



ஸ்ரீ ஜகன் மோகினி கல்யாணி
ஜெய பவ தாரிணி சுகவாணி

மாமலை தனில்வாழும் எழில்ராணி
அந்த மாதொரு பாகன்மனம் மகிழ்வேணி

புள்ளினம் பாட்டிசைக்கும் காலையிலே
உந்தன் புகழினைச் சேர்ந்திசைக்கும் சோலையிலே
வண்டினம் தேடும் உந்தன் முகமலரை
மலர்ச் செண்டிடம் கண்டிடுமே உன்னெழிலை

காற்றும் உந்தன் பெயரை ஏந்தி வரும்
நாற்று முதல் நாணல் வரை ஓதி வரும்
பெருங்கடல் அலையும் உன் சேதி சொல்லும்
அதை கேட்கையில் ஆனந்தம் மனதை அள்ளும்


--கவிநயா

2 comments:

  1. மனதை அள்ளும் கவிதைக்கு நன்றி

    ReplyDelete
  2. //மனதை அள்ளும் கவிதைக்கு நன்றி//

    வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி. அப்படியே உங்க பெயரையும் சொல்லியிருக்கலாமே :)

    ReplyDelete