Monday, October 12, 2009

உன்னையன்றி ஒருவரிடம் உள்ளம் செல்லுமோ?



உன்னையன்றி ஒருவரிடம் உள்ளம் செல்லுமோ? - உந்தன்
நாமமன்றி வேறுஒன்றை நாவும் சொல்லுமோ? - அம்மா

(உன்னை)

உன்னையன்றி ஒருவரைஎன் கண்கள் காணுமோ? - உந்தன்
புகழையன்றி வேறெதுவும் செவிகள் கேளுமோ? - அம்மா

(உன்னை)

கண்ணை விட்டு மணியிருந்தால் ஒளியும் உண்டோ?
உன்னை விட்டு நானிருந்தால் பொருளும் உண்டோ?
என்னி(ண்ணி)ல் உடன் நீவரவே உன்னை எண்ணியே
பண்ணில் வைத்துப் பாடுகின்றேன் எந்தன் அன்னையே

(உன்னை)


--கவிநயா

8 comments:

  1. http://www.youtube.com/watch?v=aIdaUztIu7g

    inge varungal.
    iniya kavinayavin
    gaanam kezhungal.

    subbu thatha

    ReplyDelete
  2. வாங்க தாத்தா. ரொம்ப நாளாச்சே பார்த்துன்னு நினைச்சேன் :)

    பாடல் அருமையாக வந்திருக்கு. (நான் நினைத்துக் கொண்டிருந்த மெட்டிலேயே) உருக்கமாக. மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  3. again
    www.youtube.com/PichuPeran
    in Raag Arabhi.

    subbu thatha

    ReplyDelete
  4. வாங்க தாத்தா. இந்த பாட்டு ரொம்ப பிடிச்சு போச்சா? எனக்குமேதான் :) ஆரபி ராகமும் அருமையா வந்திருக்கு. ஆனால் 2:30 நிமிஷத்துக்கு மேல ஒரே அமைதியா இருக்கே?

    இந்த பாட்டை கேட்கப்போய், அன்னையுடைய வீடியோ ஒண்ணு பார்த்தேன். இன்றைக்கு பதிவாகவே இட்டிருக்கேன்.

    எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி உங்களுக்குத்தான்!

    ReplyDelete
  5. // ஆனால் 2:30 நிமிஷத்துக்கு மேல ஒரே அமைதியா இருக்கே?//

    உண்மைதான், கவி நயா மேடம். எனக்கே விடியோவை அப்லோடு செய்தபிறகுதான் கவனித்தேன். ஆனால் முழுப்பாடலும்
    இருக்கிறது. ஒரு அடி கூட விட்டுப்போகவில்லை.

    ஒரு வேளை அம்மனின் திருவருளால், பாடி முடிந்தபின் அவள் நினைவாகவே, ((நீங்கள் சொன்னது போல, " உன்னையன்றிடம்
    ஒருவரிடம் உள்ளம் திரும்புமோ ?" ) பாடலின் சொல் நயத்தில் லயித்துப்போய் வாளா இருந்துவிட்டோனோ என்னவோ ?
    தேவியின் சான்னித்தியத்தில் வார்த்தைகள் ஏது ! மெளனம் அதுவும் சிந்தை அடங்குவதுவே லட்சியம் இல்லையா ! அந்த‌
    உணர்வு உங்கள் பாடலின் வழி வந்தது.

    இதில் என்ன ஆச்சரியம் என்றால், என்னுடைய ஸாஃப்ட்வேரில் சாதாரணமாக, அளவுக்கு மிஞ்சிய இடத்தை ட்ரிம்
    செய்ய இயலும். இதில் இப்படிச்செய்யப்போனால் முடியவில்லை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. //தேவியின் சான்னித்தியத்தில் வார்த்தைகள் ஏது ! மெளனம் அதுவும் சிந்தை அடங்குவதுவே லட்சியம் இல்லையா !//

    ஆம் தாத்தா! அதுதானே வேண்டும்.

    ஆனா நீங்க என்னைய மேடம்னு கூப்பிடறதுதான் நல்லாவே இல்லை :(

    ReplyDelete
  7. ஐம்புலனும் அன்னையையே அனுபவிக்கும் நிலை அருமை அக்கா.

    ReplyDelete
  8. //ஐம்புலனும் அன்னையையே அனுபவிக்கும் நிலை அருமை அக்கா.//

    மிக்க மகிழ்ச்சி குமரா :)

    ReplyDelete