Monday, May 6, 2013

நீ இல்லாத எடமே இல்ல!



இந்த முறையும் மீனாட்சி பாட்டி, சுப்பு தாத்தா இரண்டு பேருமே அருமையாகப் பாடித் தந்திருக்கிறார்கள். மிக்க நன்றி, பாட்டீ, தாத்தா!



எத்தனையோ பேருனக்கு
ஒலகமெல்லாம் ஊருனக்கு
ஆத்தா நீ இல்லாத எடமே இல்ல, ஒன்ன
பாத்தாலே தீந்து போகும் வெனையின் தொல்ல!

படிச்சவராய் இருந்தாலும்
பாமரராய் இருந்தாலும்
ஆத்தா ஒன் பேர மட்டுஞ் சொன்னாப் போதும், நம்ம
தொரத்தி வரும் தொயரெமெல்லாம் தெறிச்சே ஓடும்!

கட்டுமரம் அலபாஞ்சா
காத்தாக வருவாயே
ஆத்தா ஒன் அன்புக்கு எல்ல இல்ல, அத
பாத்த பின்ன வேற ஒண்ணுந் தேவை இல்ல!

பட்ட மரம் துளுக்குறதும்
பலபலனு பூக்குறதும்
ஆத்தா ஒன் பார்வ பட்டா நடக்கும் ஆத்தா, நீ
பாத்துபுட்டா எம் மனசும் பூக்கும் ஆத்தா!


--கவிநயா

3 comments:

  1. (வித்தியாசமான) பாடல் வரிகள் அருமை...

    ReplyDelete
  2. பொன்ன வக்கும் எடத்தில பூந்

    தமிளுச்சொல்லப் பறிச்சாந்து

    பாமால தொடுத்து வச்சோம் பொன்னாத்தா!அத்த நீ

    போட்டுக்கிட்டு பூக்கணக்கா சிரியாத்தா!

    ReplyDelete
  3. மிக்க நன்றி தனபாலன், லலிதாம்மா!

    ReplyDelete