Monday, May 27, 2013

என் இதயத்தின் ராணி!




சுப்பு தாத்தாவால் மட்டும் தான் இப்படி அனுபவித்து, உணர்வு பூர்வமாகப் பாட முடியும்! மிக்க நன்றி தாத்தா!




நீயே என் தேவி
(என்) இதயத்தின் ராணி
தாயே உன் தாள் நீ
(என்) தலை வைத்து ஆள் நீ!

இதழ்க் கடையின் சிரிப்பாலே
மனக் கவலை தீர்ப்பாய்
புகழ் கூறும் அடியவர்க்குப்
புகல் தந்து காப்பாய்!

அம்மா உன் திரு நாமம்
அறியாமல் சொன்னாலும்
அன்பே என்றோடி வந்து
அர வணைத்துக் கொள்வாய்!

பொன் போன்ற மனதோடு
பூக் கொண்டு தந்தாலும்
பூ விழியில் நீர் புரள
புள கித்து ஏற்பாய்!

உன் அன்புக் கிணையில்லை
உனைப் பற்ற பிணையில்லை
உன் போல ஏழுலகில் எவரும் இல்லை
உனைப் பாடும் பணியேயென் இன்பத்தின் எல்லை!


--கவிநயா

4 comments:

  1. அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  2. சிறப்பான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நீயே என் தேவி
    (என்) இதயத்தின் ராணி
    தாயே உன் தாள் நீ
    (என்) தலை வைத்து ஆள் நீ!

    அழகான வரிகள்,
    நன்றி !

    ReplyDelete
  4. மிகவும் நன்றி அம்பாளடியாள், தனபாலன், ஷைலன்!

    ReplyDelete