Monday, September 30, 2013

உன் மணமே என் மனம்!



காலமெல்லாம் காலடியில் கிடந்திருப்பேன், அம்மா
கனிந்த முகம் பார்த்திடவே காத்திருப்பேன்
கோலமெல்லாம் மாலையிலே தொடுத்திருப்பேன், பா
மாலையிலே நீ மணக்க மகிழ்ந்திருப்பேன்

காட்டுவழி போறேனம்மா, கை பிடித்து வா
பாட்டுச் சொல்லி வாரேனம்மா நீ ரசித்து வா
வாட்டுந் துன்பம் யாவையுமே நீ பொசுக்க வா
கோட்டையென என் மனதில் நீ வசிக்க வா

காரிருளாய் இருந்தாலும் உன் துணை போதும்
கற்பகமே உன்னொளியே என் வழியாகும்
சேர்ந்து வரும் வினை யாவும் எனை வெறுத்தோடும்
செண்பகமே உன் மணமே என் மனமாகும்!


--கவிநயா

படத்திற்கு நன்றி: http://photofeature.templesonnet.com/aadi-month-2012/sri-durgai-patteeswaram-temple.shtml

4 comments:

  1. அருமை அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டு அருமையா? :) மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி ஜனா! :)

      Delete