Monday, December 15, 2014

உன்னை நாடி...


வஸந்தா ராகத்தில் சுப்பு தாத்தா அருமையாகப் பாடித் தந்தது இங்கே...மிக்க நன்றி தாத்தா!



என்னுள்ளம் உன்னை நாடி ஓடுதே

பூவைத் தேடும் வண்டைப் போலப் பாடுதே

(என்னுள்ளம்)



வானில் அலையும் மேகம் போல அலையுதே

தானும் கொள்ள நீரைக் கொஞ்சம் தேடுதே

(என்னுள்ளம்)



பூவை உந்தன் பாதப் பூவை நாடுதே

சேவை உனக்குச் செய்ய வேண்டி ஏங்குதே

நாவில் உந்தன் நாமம் மட்டும் நவிலுதே

பாவில் உன்னைப் பாடிப் பாடி மகிழுதே

(என்னுள்ளம்)


--கவிநயா

2 comments: