Monday, December 29, 2014

என் வேலை!

அனைவருக்கும் மனமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் என்றென்றும் நிறைந்திருக்கட்டும்!

சுப்பு தாத்தா பைரவி / முகாரியில் உளமுருகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



என் குரல் உன் காதில் விழுகிறதோ, இல்லை
காற்றினில் தடம் மாறி அலைகிறதோ?
(என் குரல்)

தாயுன்னை அழைக்கின்றேன் தமிழாலே, கொஞ்சம்
சேயென்னைப் பாராயோ அருளாலே?
(என் குரல்)

காலைச் சுற்றி வருகின்றேன் காவாயோ? கடும்
பாலைதனில் உனதருளைப் பொழியாயோ?
வேலையென்று வேறில்லை என் தாயே, உன்னருள்
வேண்டுவதே என்வேலை அறியாயோ?
(என் குரல்)

 --கவிநயா

2 comments:

  1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete