Monday, January 5, 2015

நினையாத நாளில்லை...

சுப்பு தாத்தா வாலஜியில் மனம் வருடும்படி பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



நினையாத நாளில்லையே
பதம் பணியாமல் வாழ்வில்லையே
(நினையாத)

பட்டருக்கெனவே பால்நிலவினை அமைத்தாய்
பதிக்கென பெருவிரலில் நின்று பெருந் தவம் புரிந்தாய்
ரதிக்கென அவள் பதியை உயிர்ப்பித்துக் களிப்பித்தாய்
கதியென உனை அடைந்தேன் எனக்கென்ன தந்திடுவாய்?
(நினையாத)

சுகம் எதும் வேண்டுமென்று வேண்டவில்லை உன்னிடத்தில்
பதம் ஒன்றே சுகம் என்று சேர வந்தேன் உன் பதத்தில்
பாலையிலே ஊற்றாக… பாடி வரும் காற்றாக…
ஓடி இங்கு வர வேண்டும், உத்தமியே எனக்காக!
(நினையாத)


--கவிநயா 

2 comments: