Monday, March 2, 2015

உன் பெயர்

சுப்பு தாத்தா அமைத்த அருமையான ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!



உன் பெயர் ஒன்றேதான்
நான் அறிந்த மொழியானது!
உன் புகழ் ஒன்றேதான்
நான் பாடும் கவியானது!
(உன் பெயர்)

எந்தன் சின்ன உள்ளத்திலும்
குடியிருக்க உள்ளம் கொண்டாய்;
என்னவென்று சொல்லிடுவேன் உன் கருணை!
சொல்லிச் சொல்லித் தீராதம்மா உன் பெருமை!
(உன் பெயர்)

அன்பெனும் கருக் கொண்டு
அகிலத்தை உயிர்ப்பித்தாய்!
அன்னையெனும் உருக் கொண்டு
அரவணைத்து மகிழ்ந்தாய்!

எந்தை சிவனுடனே
ஏந்திழையே வருவாய்!
முந்தை வினை முறித்து
முக்கண்ணியே அருள்வாய்!
(உன் பெயர்)


--கவிநயா

2 comments:

  1. "எந்தன் சின்ன உள்ளத்திலும்
    குடியிருக்க உள்ளம் கொண்டாய்;
    என்னவென்று சொல்லிடுவேன் உன் கருணை!"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்.

      Delete