Monday, March 23, 2015

அன்னையென்று உனை அழைக்க...


சுப்பு தாத்தா மெல்லிசையில் மென்மையாகப் பாடித் தந்தது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



அன்னையென்று உனை அழைக்க

அருந்தமிழ் நீ தந்தாய்

அன்னையென்ற சொல்லுக்கு

அரும்பொருளாய் நின்றாய்

(அன்னை)



எந்தை சிவனுக்கு ஏற்றம் தருபவளே

தந்தை தாயெனவே அவனுடன் அருள்பவளே

கந்தன் கணபதியை உலகிற்குத் தந்தவளே

விந்தை வாழ்விதிலே துணையென வருபவளே

(அன்னை)



பாசமும் அங்குசமும் பாவை உந்த கரமிருக்க

வாசமலர்ப் பாதங்கள் பிள்ளையெந்தன் சிரமிருக்க

தூசான துன்பம் எல்லாம் துரத்துதல் மறந்திருக்க

நேசம்மிகும் நெஞ்சமெல்லாம் உன்நினைவே நிறைந்திருக்க

(அன்னை)


--கவிநயா

2 comments: