Monday, April 20, 2015

மங்கலத் திருத்தாயே!

மங்கலத் திருத்தாயே மனமகிழ்ந்தருள்வாயே
செங்கமலத் தாள்கள் சென்னியில் பதிப்பாயே
(மங்கலத்)

சித்தி விநாயகனைப் பெற்றவளே தாயே
செந்தில்வடி வேலன்கையில் சக்திவே லானாய் நீயே
(மங்கலத்)

ஆதியந்தம் இல்லா வேதத்தின் விழுப்பொருளே
சோதிப் பிழம்பானவனாம் சுந்தரனின் துணையே
வெள்ளைப்பனி மலையில் வீற்றிருக்கும் அமுதே
பிள்ளை உள்ளந் தனிலும் குடியிருப்பாய் இனிதே
(மங்கலத்)


--கவிநயா

No comments:

Post a Comment