Monday, April 27, 2015

சிலையென நில்லாதே அம்மா!



பலமுறை உனைப் பணிந்தேன் பார்வதியே

சிலையென நில்லாமல் பார் உமையே!

(பலமுறை)



விலங்கெனும் மனம் கொண்டு உழலுகிறேன்

விளக்கென ஒளி தந்து காவாயோ?

(பலமுறை)



வழியும் கண்ணீர் துடைக்க வர வேண்டும்

தொழுதென்றும் உனைப் பணியும் வரம் வேண்டும்

மழுவினை ஏந்துகின்ற மன்னனுடன் வந்து

மழையென உன்னருளைத் தர வேண்டும்!

(பலமுறை)


--கவிநயா 


No comments:

Post a Comment