Monday, September 7, 2015

பக்தி என்னும் பணிவன்பு


சுப்பு தாத்தா அருமையுடன் பாடித் தந்ததை அன்புடன் கேட்டு மகிழுங்கள்... மிக்க நன்றி தாத்தா!



பக்தி எனும் பணிவன்பு வரும் நாள் என்றோ?

சக்தி உந்தன் திருவருளைப் பெறும் நாள் என்றோ?

(பக்தி)



சித்தி எதும் வேண்டவில்லை உன்னை தாயே, உள

சுத்தியொன்றே தந்தருள வேண்டும் நீயே!

(பக்தி)



கற்றுக் கொண்ட பாடங்கள் கைகொடுக்கவில்லை, உன்னைப்

பற்றிக் கொண்டேன், ஆனாலும் பற்று விடவில்லை

சிக்கிக் கொண்டேன் சிறையினுள்ளே தப்ப வழியில்லை, என்னைப்

பெற்றவளே உன்னையன்றிப் புகல் எனக்கு இல்லை!

(பக்தி)


--கவிநயா 


No comments:

Post a Comment