Monday, September 28, 2015

நாவில் நடமிடும் நாமம்


தேவ காந்தாரி ராகத்தில் ரசித்துப் பாடியிருக்கிறார், சுப்பு தாத்தா. மிக்க நன்றி தாத்தா!



நாவினில் நடனமிடும் நாயகி உன் நாமம்

பாவினில் பதம் தூக்கி ஆடிடும் உன் பாதம்

(நாவினில்)



அடிமுடி காட்டாத அண்ணா மலையானை

நொடியதும் பிரியாமல் இடங் கொண்ட என் தாயே

(நாவினில்)



காவென வருவோரைக் காத்திடும் என் தாயே

தாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய் நீயே

வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய் தாயே

போவெனத் தள்ளாமல் புகல் தருவாய் நீயே

(நாவினில்)

--கவிநயா 


5 comments:

  1. "காவென வருவோரைக் காத்திடும் என் தாயே
    தாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய் நீயே
    வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய் தாயே
    போவெனத் தள்ளாமல் புகல் தருவாய் நீயே"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன், திரு.நடராஜன்.

    ReplyDelete