Monday, September 14, 2015

அனைத்தும் நீயே!


உலகமெல்லாம் உந்தன் திருவுருவே
உள்ளமெல்லாம் உந்தன் எழில் வடிவே!
(உலகமெல்லாம்)

காணும் பொருளினில், காணா இருளினில்...
தோன்றும் பொருளினில், தோன்றா மருளினில்....
(உலகமெல்லாம்)

வான் நிலம் நீர் நெருப்பு காற்றிவை நீயானாய்
கோன் குடி உயிர்களெல்லாம் கொற்றவையே நீயானாய்
தேனெனும் மொழியானாய், தெள்ளு தமிழ்க் கவியானாய்
மானனை விழியாளே மனதினில் நிலையானாய்!
(உலகமெல்லாம்)


--கவிநயா

3 comments: