Monday, November 2, 2015

உனதருள் வேண்டும்!!



பிரபல ஹிந்தி பாடல் மெட்டில் பாடியிருக்கிறாராம் சுப்பு தாத்தா. எந்தப் பாட்டென்று உங்களுக்குத் தெரிகிறதா? மிக்க நன்றி தாத்தா!



என்னை மறந்து உன்னை நினைக்க உனதருள் வேண்டும்

உன்னை நினைந்து உலகை மறக்க உனதருள் வேண்டும்

(என்னை)



கண்ணை மறந்த இமையும் உண்டோ சொல்வாயே தாயே

உன்னை மறந்து நான் இங்கு வாழும் நிலை நீ தந்தாயே

உயிரே இன்றி உடல் வாழ்ந் திடுமோ சொல்வாயே தாயே

உன்னை மறந்து நான் இங்கு வாழும் நிலை நீ தந்தாயே

(என்னை)



எந்தன் தாயும் அன்புச் சேயும் நீயே என் தாயே

என் சோதரியும் உயிரின் தோழியும் நீயே ஆனாயே

உறவுகளாய் உனைக் கொண்டேன் நானும் அறிவாயோ தாயே

இரவாய்ப் பகலாய் உனையே துதிக்கும் வரமெனக் கருள்வாயே

(என்னை)

--கவிநயா 


2 comments:

  1. "என்னை மறந்து உன்னை நினைக்க உனதருள் வேண்டும்

    உன்னை நினைந்து உலகை மறக்க உனதருள் வேண்டும்"

    எல்லா வரிகளுமே ரெம்ம்ப அருமை!
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete