Monday, January 4, 2016

கனிவாய் என்னைக் காவாயோ?


அம்பிகை அஷ்டகம் - 3

பலவாய்ப் பாவம் புரிந்தேனை

பணியா துன்னைத் திரிந்தேனை

நிலையா துலகில் உழன்றேனை

நினையா துன்னை மறந்தேனை

நீயும் நினையா திருப்பாயோ?

நின்றன் பிள்ளை மறப்பாயோ?

காயும் உள்ளம் பாராயோ?

கனிவாய் என்னைக் காவாயோ?


--கவிநயா 

(தொடரும்)
 

No comments:

Post a Comment