Monday, January 25, 2016

பொறுத்தெனைக் காவாயோ?


 

அம்பிகை அஷ்டகம் - 6

யோகம் யாகம் நானறியேன்

உனக்கென நானெதும் செய்தறியேன்

தியானம் ஞானம் நானறியேன்

தாயே உனக்கெதும் தந்தறியேன்

எனினும் உனையே வேண்டுகிறேன்

இதைத் தா அதைத் தா என்கின்றேன்

நியாயம் இல்லை உணர்கின்றேன்

இருந்தும் பொறுத்தெனைக் காவாயோ?


---கவிநயா 

(தொடரும்)

No comments:

Post a Comment