Monday, May 16, 2016

காஞ்சி நகர்க் காமாட்சி!



சுப்பு தாத்தா மனமுருகிப் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிக்க நன்றி தாத்தா!


காஞ்சி நகர்க் காமாட்சி கவலையெல்லாம் தீர்த்திடுவாள்
காலடியில் விழுந்து விட்டால் கண்ணிமை போல் காத்திடுவாள்

வாஞ்சை மிகு காமாட்சி வருத்தமெல்லாம் தீர்த்திடுவாள்
வஞ்சியவள் அஞ்சலென்று அன்பு தந்து காத்திடுவாள்

பிஞ்சுப் பிள்ளை நெஞ்சத்திலே தேடி வந்து குடியிருப்பாள்
வஞ்சம் கொண்ட நெஞ்சத்திலே தங்க மிகத் தயங்கிடுவாள்

தேவர்களும் மூவர்களும் வணங்குகின்ற தாயவளாம்
கோபந்தன்னை விட்டு விட்டு சாந்த ரூபி யானவளாம்

அன்னையென்ற ரூபம் கொண்டு அகிலம் காக்க வந்தவளாம்
பிள்ளைகளை ஏந்திக் கொள்ள அமர்ந்த கோலம் கொண்டவளாம்

கருப்பு வில்லைக் கையில் கொண்ட காம கோடி தேவியளாம்
திருச்சக்கர நாயகியாம் அள்ளித் தரும் அம்பிகையாம்



--கவிநயா







No comments:

Post a Comment