Monday, May 30, 2016

ஆதிசக்தி மகமாயி!


 தர்பாரி கானடா ராகத்தில், சுப்பு தாத்தாவின் குரலில்... மிக்க நன்றி தாத்தா!


அன்பு கொண்டு காப்பவளே
ஆதிசக்தி மகமாயி!
துன்பங் கண்டு கலங்குமெனக்குத்
துணையிருக்க வருவாய் நீ!
(அன்பு கொண்டு)

தேவையென்று சொன்னால்தான்
தேவதையே வருவாயோ?
தேவைகளை அறியாயோ
வேதனைகள் மறியாயோ?
(அன்பு கொண்டு)

ஆயிரம் பிழைகள் செய்தாலும்
அன்னை நீயன்றோ?
பாயிரம் பாடி வாழ்த்திடும் பிள்ளையைப்
பொறுப்பதுன் கடனன்றோ?

அம்மா என்று கதறிடும் கன்றை
வெறுத்திடும் பசு உண்டோ?
துரத்திடும் துன்பத்தின் துயரத்தைப் போக்க
உனையின்றி எவருமுண்டோ?
(அன்பு கொண்டு)


--கவிநயா


No comments:

Post a Comment