Monday, May 23, 2016

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி!



சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!
 

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜெகமாளும் புவனேஸ்வரி
(ஸ்ரீ)

ஓமென்னும் நாதத்தில் ஓங்கார ரூபத்தில்
ஸ்ரீ சக்ர சிம்ஹாச னேச்வரி
ஒலிக்கின்ற வேதத்தில் எழில் பூத்த கோலத்தில்
ஸ்ரீ லலி தாபர மேஸ்வரி
(ஸ்ரீ)

கரும்புடன் மலர்கள் கைகளில் ஏந்தி
கருணை பொழியும் கருமுகிலே
விரும்பும் அடியவர் தொழுதிட அவர்வழித்
துணையென வருகின்ற அருள் நிதியே

பிறவிப் பிணியினைப் போக்கிடும் தாயே
சரணென வந்தேன் காத்திடுவாயே
பிறைமதி சூடியின் ப்ரியநா யகியே
குறை மதியேன்எனை யும்ஆதரியேன்
(ஸ்ரீ)





-கவிநயா


No comments:

Post a Comment