கீதா ரங்கன் அவர்களின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!
அள்ளித் தரும் கற்பகம்
அள்ளித் தரும் கற்பகமாய்
அன்னையவள் அவதரித்தாள்
புள்ளி மயில் ரூபத்திலே
புன்னை வனத்தில் தானுதித்தாள்
சின்னஞ் சிறு அலகாலே
வண்ண மலர் கொய்து வந்தாள்
சித்தமெல்லாம் சிவமாக்கி
சிரத்தையுடம் பூசை செய்தாள்
சக்தியவள் இல்லையென்றால்
சிவமுங்கூட சவமாவான்
சத்தியத்தை அறிந்தவள்தான்
பக்தியுடன் தவமிருந்தாள்
தன்னை அறிந்திருந்தும்
தானென்ற அகந்தையின்றி
கண்மணியாள் கற்பகத் தாய்
கருத்துடனே தவமிருந்தாள்
தாய் போலத் தவமிருந்து
திருவடிகள் தமைச் சேர
தாய் நீயே அருள்வாயே
தயை புரிய வருவாயே
--கவிநயா
படத்துக்கு நன்றி: https://farm4.staticflickr.com/3878/14685155415_a860df4b9c_b.jpg

No comments:
Post a Comment