Monday, August 29, 2016

அகிலாண்டேஸ்வரி!



தொண்டை சரியில்லாத போதும் அன்புடன் பாடித்தந்த கீதாம்மாவிற்கும் சுப்பு தாத்தாவிற்கும் மனமார்ந்த நன்றி. கீதாம்மாவிற்கு தொண்டை விரைவிலேயே குணமாக அகிலாண்டேஸ்வரி அருள் புரிய வேண்டுகிறேன்.....ஹம்ஸானந்தி ராகத்தில்...





அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி

ஆதி பரா சக்தி

உலகாள் பவளே இமவான் மகளே

எமை ஆள் சிவ சக்தி



திருஆனைக்கா வினிலே எழிலாய்க்

கோவில் கொண்டவளே

இள யானைக்கன் றாம்கணபதி

தாயாய் ஆனவளே



காவிரி நீரால் லிங்கம் செய்து

கருத்துடன் பூசித்தாய்

காரியம் ஒன்றே கண்ணாய்க் காதல்

கணவனை யாசித்தாய்



உன்னைப் போலே உள்ளன்புடனே

உன்னை வழிபடணும்

உன்னைப் போலே ஒருமனதுடனே

உன்னைப் பணிந்திடணும்



உள்ளும் புறமும் உந்தன் நினைவால்

புனிதம் ஆகிடணும்

உந்தன் நாமம் எந்தன் சுவாசக்

காற்றாய் ஆகிடணும்


--கவிநயா

No comments:

Post a Comment