Monday, January 16, 2017

வாராயோ?



கீதாம்மாவின் இனிய குரலில், ஆரபி ராகத்தில்

திருமுகம் நினைந்துய்ய

திருவடி பணிந்துய்ய

ஒரு வரம் தாராயோ,  உன்னைப்

பெறும் வரம் தாராயோ?



பாதத் துளியாலே நடக்கும் தொழிலெல்லாம்

வேதப் பொருளாளே கடைக்கண் பாராயோ?



வேழ முகத்தோனைக் காக்கும் தாயானாய்

சேவற் கொடியோனின் கரத்தில் வேலானாய்

நானும் உன் பிள்ளை, எனை நீ மறந்தாயோ

போதும் கடுந்துன்பம், விரைந்தே வாராயோ?


--கவிநயா 



No comments:

Post a Comment