Monday, January 9, 2017

உன் நினைவாலே...



கீதாம்மாவின் உருகும் குரலில், ஸ்ரீ ராகத்தில் மிக்க நன்றி அம்மா!

உன் நினைவாலே நான் வாழுகிறேன்

உன் அருளாலே தான் பாடுகிறேன்

(அம்மா, உன் நினைவாலே)



உன் திருமுகம் நினைந்து… உன் திருப்பதம் பணிந்து

உன்னை தினம் பூசித்து… உன்னருளை யாசித்து

(அம்மா, உன் நினைவாலே)



தாமரை மலர் முகம் என்… மனக் குளத்தில் மிதக்கும்

சோதனை எது வரினும்… உன் நினைவில் மறக்கும்

பூரண நிலவெழிலாய்… மங்கை முகம் இருக்கும்

பொங்கி வரும் புன்னகையில்… மூவுலகும் ஜொலிக்கும்

(அம்மா, உன் நினைவாலே)


--கவிநயா 

No comments:

Post a Comment