Tuesday, March 14, 2017

பலப்பலவாய் அருள்வாள்!



கீதாம்மா தன் இனிய குரலில்...தர்மாவதி ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

மயிலையிலே வாழும் கற்பகமே

கயிலையினை ஆளும் அற்புதமே!

(மயிலையிலே)



திருமியச்சூரினிலே லலிதாம்பா

நெமிலியிலே இளைய பாலாம்பா

மாங்காட்டினிலே காமாக்ஷி

மதுரையில் மீன்விழியாள் மீனாக்ஷி

(மயிலையிலே)



தில்லைச் சிதம்பரத்தில் சிவகாமி

திருக்கடவூரினிலே அபிராமி

திருவேற்காட்டினிலே கருமாரி, அவளே

பலப்பலவாய் அருள்வாள் உருமாறி

(மயிலையிலே)


 --கவிநயா 

2 comments:

  1. "தில்லைச் சிதம்பரத்தில் சிவகாமி
    திருக்கடவூரினிலே அபிராமி
    திருவேற்காட்டினிலே கருமாரி, அவளே
    பலப்பலவாய் அருள்வாள் உருமாறி"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன்!

    ReplyDelete