Monday, March 6, 2017

அழகி!



கீதாம்மா தன் இனிய குரலில்...அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். மிக்க நன்றி கீதாம்மா!

மணக்கும் மல்லி வாங்கி வந்தேன் மதுரை மீனாட்சி

உந்தன் கூந்தலிலே அது மணத்தால் கண்கொள்ளாக் காட்சி!

(மணக்கும்)


(உன்)விழியழகைப் பார்த்து பிரமன் மீன் படைத்தானோ, உந்தன்

நடையழகைப் பார்த்து அவன் மான் படைத்தானோ?

இல்லாத இடையைக் கண்டு கொடி படைத்தானோ, இல்லை

முறுவலிக்கும் இதழைக் கண்டு மலர் படைத்தானோ?



உன்னழகைக் கண்டு கண்டு சொக்கியவர் கோடி, நீயோ

சொக்கனவன் சுந்தரத்தில் சொக்கினாயே போடி!

(மணக்கும்)



கண்ணொளியைக் கண்டதனால் கதிரவன் வந்தான், அதில்

கருணையினைக் கண்டதனால் கருங்கடல் தந்தான்

கூந்தல் நிறம் கண்டதனால் மேகத்தைச் செய்தான், சின்னப்

பாதங்களைக் கண்ட பின்னே தாமரை செய்தான்



உன்னழகைக் கண்டு கண்டு சொக்கியவர் கோடி, நீயோ

சொக்கனவன் சுந்தரத்தில் சொக்கினாயே போடி!

(மணக்கும்)


--கவிநயா 

2 comments:

  1. "
    கண்ணொளியைக் கண்டதனால் கதிரவன் வந்தான், அதில்
    கருணையினைக் கண்டதனால் கருங்கடல் தந்தான்
    கூந்தல் நிறம் கண்டதனால் மேகத்தைச் செய்தான், சின்னப்
    பாதங்களைக் கண்ட பின்னே தாமரை செய்தான்"

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன்!

    ReplyDelete