Monday, May 1, 2017

எல்லாம் உனதருளாலே!



கீதாம்மா தன் இனிய குரலில்...ஆபோகி ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

எல்லாம் உனதருளாலே, இந்த

இயற்கையும் உனதருளாலே

உயிர்களும் உனதருளாலே, அவை

வாழ்வதும் உனதருளாலே

(எல்லாம்)



சுவாசிக்கும் காற்றும், அருந்திடும் நீரும்,

தாங்கிடும் புவியும், உன்னாலே

ஆகாய வெளியும், சூர்ய சந்திரரும்,

அக்கினியும் உன்னருளாலே

(எல்லாம்)



பலப்பலப் பிறவியும், இன்பமும் துன்பமும்,

இறப்பதும் நிகழ்வது உன்னாலே

விதியினில் உழல்வதும், விடுபட்டு எழுவதும்

உன்பதம் சேர்வதும் உன்னருளாலே

(எல்லாம்)


--கவிநயா 

2 comments:

  1. பலப்பலப் பிறவியும், இன்பமும் துன்பமும்,
    இறப்பதும் நிகழ்வது உன்னாலே
    விதியினில் உழல்வதும், விடுபட்டு எழுவதும்
    உன்பதம் சேர்வதும் உன்னருளாலே

    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி, ஷைலன்!

    ReplyDelete