Monday, June 19, 2017

மௌனம் ஏன்?



கீதாம்மா தன் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

ஒரு வார்த்தை சொல்லாததேனோ?
திருவாய் மலர்ந்தெந்தன் மனம் குளிர இன்னும்

(ஒரு வார்த்தை)



என்னை அறிந்திருந்தும், உண்மை புரிந்திருந்தும்

உனையே சரணென்று அடைந்தேன் தெரிந்திருந்தும்

(ஒரு வார்த்தை)



மாந்தர்தம் வார்த்தையெல்லாம் மறைந்தே போகுதம்மா

காற்றோடு காற்றாக கரைந்தே போகுதம்மா

உந்தன் திருவாக்குக் கூட அதுபோல் ஆகுமென்றோ

மௌனம் காக்கின்றாய், முறுவல் பூக்கின்றாய்

(ஒரு வார்த்தை)


--கவிநயா

2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ஷைலன்!

      Delete